அதிகாரப் பகிர்வு குறித்து சித்தராமையா, டி.கே.சிவகுமாருடன் ஆலோசனை - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் அதிகாரப் பகிர்வு விவகாரம் குறித்து முதலமைச்சர் சித்தராமைய்யா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரின் ஆலோசனை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். 

கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி தொடர்பான பிரச்சனை தீவிரமடைந்துள்ளநிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார். ராகுல் காந்தியும் இந்த ஆலோசனையில் இருப்பார் என்றும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட அனைவரும் இதில் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார். அனைவருடனும் கலந்துரையாடிய பிறகு, உயர்மட்டக் குழு விவாதித்து முடிவு எடுக்கும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

varient
Night
Day