"ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் பணம் மீட்கப்பட்டுள்ளது" - பிரதமர் மோடி பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஊழலை எதிர்க்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும்  மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஊழலை ஒழிக்க பாடுபடுகின்றன என்றும்  ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை மீட்ட போது அதை பார்த்து ஒட்டுமொத்த நாடும் மலைத்து நின்றதுஎனவும் பிரதமர் கூறினார். தவறு செய்தவர்கள் யார் என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்யும் என்றும் பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றனஎனவும் கூறினார்.ர்  ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது என கூறிய பிரதமர்   ஊழல் செய்து சம்பாதித்த பணம் அனைத்தும் மீட்கப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.   

varient
Night
Day