"ஊழல் தலைவர்களை மட்டுமே காங்கிரஸ் மதித்தது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் அடுத்த முறை மீண்டும் ஆட்சி அமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைப்போம் என சூளுரைத்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும்,  ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.விவசாயிகளின் நம்பிக்கையை உடைத்தது காங்கிரஸ் கட்சி தான் - பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு முன்னணியில் உள்ளதாகவும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் இரட்டிப்பாக இருந்ததாக கூறிய பிரதமர், குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பணம் அதிகமாக இருந்தது என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

Night
Day