திருவண்ணாமலை: ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சேனல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்தப் புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day