சேலம்: ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் விமரிசையாக நடைபெற்ற சத்தாபரண நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடசென்னிமலையில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சத்தாபரண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. கடந்த 25ந்தேதி திருத்தேர் விழா நடைபெற்ற நிலையில், கடைசி நாளான நேற்று சத்தாபரண நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day