புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தைலாபிஷேக விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தைலாபிஷேக நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், புற்று வடிவில் அருள்பாலிக்கும் மூலவர் அம்பாளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு மண்டலத்திற்கு தைலாபிஷேகம் நடைபெறும். அப்போது, 48 நாட்களும் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை ஆராதனை செய்யப்படும். மேலும், கருவறையிலுள்ள அம்பாளுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 4-ம் தேதி வரை 48 நாட்களுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மூலவர் முத்து மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் செய்வதற்கு தேவையான அபிஷேக பொருட்களை வழங்கி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதேபோன்று துர்க்கை அம்மன் சன்னதியிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று மனமுருக வழிபட்டார். கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மாவை கண்ட பொதுமக்கள், ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
மேலும் கோவிலில் இருந்து புறப்படும் போது அங்கு இருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். 

varient
Night
Day