IPL கிரிக்கெட் போட்டி : மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி முதல் 1 மணி வரை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் இன்று இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் இன்று இரவு கோலாகலமாக தொடங்குகிறது. இதனையொட்டி, மெட்ரோ ரயில்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டி காரணமாக கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால்,  பயணிகள் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Night
Day