முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய உயர்வு - பிசிசிஐ ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்திவருகிறது. வருடாந்திர தக்கவைப்பு ஒப்பந்தங்களைத் திருத்தவும், ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் சிவப்பு பந்து ஆட்டங்களில் வீரர்களின் பங்கேற்பு ஆர்வத்தை அதிகரிக்கவும் பிசிசிஐ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி கட்டணம் மற்றும் வெகுமதிகளை உயர்த்துவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுடன் பிசிசிஐ ஆலாசனை நடத்தியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்துடன், சிவப்புபந்துகளில் விளையாடும் ரஞ்சி மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் ஊதியத்தை இணைத்து வழங்கவும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day