மக்களவை தேர்தல் பாதுகாப்பு தொடர்பான தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு மீண்டும் பதற்றமான வாக்குசாவடிகளின் பட்டியல் தயார் செய்யப்படுமென தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சத்யபிரதா சாகு தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு 200 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், நாளை 15 கம்பெனி துணை ராணுவமும், வரும் 7-ம் தேதி 10 கம்பெனி துணை ராணுவமும் வர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் பதற்றமான வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்படுமெனவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Night
Day