விளையாட்டு
சிறிது நேரத்தில் புறப்பட்ட மெஸ்ஸி... மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்......
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் இருந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி சென்றதும் ...
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைக்கவுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில் இதுவரை 13 வீரர்கள் மட்டுமே 100 போட்டிகளை கடந்து விளையாடியுள்ளனர். அந்த சாதனை வரிசையில் தற்போது அஸ்வினும் இணையவுள்ளார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் யாரும் விளையாடியது இல்லை. அந்தவகையில் இந்திய அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக வீரர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைக்கவுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் இருந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி சென்றதும் ...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...