மாநில அளவிலான சிலம்பப் போட்டி : வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 750-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Night
Day