விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேகமாக பந்து வீசி மிரட்டல் சாதனை படைத்த மயங்க் யாதவுக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரட் லீ வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துவிட்டதாகவும், மயங்க் யாதவின் மிரட்டலான வேகம் மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி தரப்பில் சிறப்பாகவும், அதிவேகமாகவும் பந்துவீசிய 21 வயதான மயங்க் யாதவ், ஒரு கட்டத்தில் 155.8 கிலோமீட்டர் என்ற உச்சகட்ட வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல் தளத்தில் ராம...