தன்னை நோக்கி ஓடி வந்த ரசிகரை கண்டு ரோகித் சர்மா அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தன்னை நோக்கி ஓடி வந்த ரசிகரை கண்டு ரோகித் சர்மா அதிர்ச்சிக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின், போது ஃபில்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மாவை நோக்கி ரசிகர் ஒருவர் ஓடி வந்தார். இதனை எதிர்பாராத ரோகித் சர்மா, திடீரென அருகே வந்த ரசிகரை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர், அந்த ரசிகரை ரோகித் சர்மா கட்டியணைத்து கொண்டார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

varient
Night
Day