டி20 கிரிக்கெட்டில் 5வது சதமடித்து ரோகித் சர்மா அசத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 சாதனைகளை படைத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பவர் ப்ளேவில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. சரிவில் இருந்த அணியை தனது அதிரடி ஆட்டத்தால் கேப்டன் ரோகித் சர்மா தூக்கி நிறுத்தினார். 69 பந்துகளில் 121 ரன்களை எடுத்து ரோகித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில், சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்று, இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்களை குவித்த வீரர் எனவும் சாதனையையும் படைத்தார். இதேபோல், இந்தியாவிற்காக டி20 தொடர்களில் கேப்டனாக அதிக போட்டிகளை வென்றவர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார். 

Night
Day