இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவின் 37வது பிறந்தநாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது 37வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர், 5 ஐபில் கோப்பையை வென்று கொடுத்ததுடன், 3 இரட்டை சதம், அதிக சிக்சர்கள், 31 ஒருநாள் சதங்கள் என பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ரோகித் சர்மா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடத்தில் ஈடுபட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவர், இன்றைய லக்னோவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day