2-வது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு - இன்று விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் தாக்‍கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில்தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்று கூறப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுவதாகவும் மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்‍கு வருகிறது.

Night
Day