பிப். 1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வரும் 1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை  உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மதுபானத்தின் விலை 10 ரூபாயும் 180 மில்லி உயர் ரக மதுபானத்தின் விலை 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பீர் வகைகள் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் ஒரு லிட்டர் மதுபானங்களில் விலையும் அந்தந்த ரகங்களுக்கு ஏற்ப உயர்த்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Night
Day