12-ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 திருநெல்வேலி மற்றும் கோவையில் வருகிற 12ம்தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வருகை தர உள்ளனர். 
கோவையில் நடைபெற உள்ள ரோடு ஷோவிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகவும், அன்று மாலை கோவையில் நடைபெற உள்ள பொதுக்‍கூட்டத்திலும் ராகுல்காந்தி உரையாற்ற உள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும் உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில், கரூர், மயிலாடுதுறை, மற்றும் சிவகங்கையில் பிரியங்கா காந்தி வருகிற 15ம்தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். 16ம்தேதி தமிழகம் வர உள்ள மல்லிகார்ஜூன கார்கே, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Night
Day