ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புற மாசுவை அகற்ற திட்டம் வகுக்கும் பணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்வது தொடர்பான திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி உள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்‍கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய பகுதியில் ஏற்பட்ட மாசுவை அகற்றும் திட்டத்தை விரைந்து வகுக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

varient
Night
Day