வணிக உணவு நிறுவனங்களுக்கு 14 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - உணவு பாதுகாப்பு துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உணவகங்களில் சிக்கன் 65, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களின் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது உள்ளிட்ட 14 ஒழுங்குமுறை உத்தரவுகளை பிறப்பித்து உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட  காகிதங்களில் உணவுப் பொருள்களை நேரடியாக விநியோகிக்க கூடாது என்றும், விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறத்தப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் வைத்து காட்சிப்படுத்த வேண்டும், உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதேபோல், சிக்கன் 65, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது, அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவுகளை சூடாக பொட்டலமாக விற்பனை செய்யக்கூடாது  என்பது உள்ளிட்ட 14 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

உணவு வணிகர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

Night
Day