எழுத்தின் அளவு: அ+ அ- அ
தக்லைப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக்லைப்' திரைப்படம் நாளை உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிக்களில் வெளியிடப்படுவதை தடுக்க அரசு மற்றும் தனியார் இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் தக்லைப் படம் வெளியாக உள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, தக்லைப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்