ஜூன் 6 ஆம் தேதி செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமாக அங்கீகரிக்கப்பட்ட செனாப் பாலத்தை வரும் 6-ம் தேதி பிரதமர்  மோடி திறந்து வைக்கிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ஒரு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. 

செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம், பிரான்சில் உள்ள ஈஃபில் கோபுரத்தை விட, 115 அடி அதிக உயரமானதாகும். 28 ஆயிரம் டன்களுக்கு மேல் எஃகு மற்றும் 66 ஆயிரம் கன மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலம், 'லிம்கா' சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

இப்பாலத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் குளிர்சியான சூழலுக்கு ஏற்ப, இந்த வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த செனாப் பாலத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அந்த நிகழ்வுடன் காஷ்மீர்- கன்னியாகுமரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day