எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞர் கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்திபுரத்தில் யோகலட்சுமி என்பவரின் முந்திரி தோப்பில் இவரது பாட்டியான 80 வயது மூதாட்டி சுசிலா மற்றும் இவரது மூளை வளர்ச்சி குன்றிய மகன் முருகன் ஆகியோர் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை கஞ்சா போதையில் சென்ற இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே, அவரை கீழே தள்ளி காலை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற ஆற்காடு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, இச்சம்பவம் இச்சம்பவம் தொடர்பாக கத்தியவாடி பகுதி பத்மநாபன் என்பவரின் மகன் நந்தகுமார் என்ற 19 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போதை இளைஞர் மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது