ராமநாதபுரத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே கண்டெய்னர் லாரியும், உப்பு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருச்சியில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ராமநாதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது தேவிபட்டினம் அருகே லாரி சென்றபோது, எதிரெ உப்பு ஏற்றி வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த பொன்னவேலு என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day