மெட்ரோ பணிகளுக்‍காக அஜந்தா மேம்பாலம் இடிப்பு - 4 கி.மீ. சுற்றி செல்லவுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்‍காக அஜந்தா மேம்பாலம் இடிக்‍கப்பட்டதால் ஒரு கிலோமீட்டர் தொலைவு செல்ல 4 கிலோமீட்டர்​சுற்றி செல்ல வேண்டி இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் இடிக்கப்பட்டது. இதனால் அந்த சாலைகளில் செல்லக்கூடிய பேருந்துகள் அவ்வை சண்முக சாலை வழியாக செல்லும்படி மாற்றி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்‍கள் கோரினர்.

varient
Night
Day