சென்னை : கொளத்தூரில் மாநகரப் பேருந்து மோதியதில் இளம்பெண் தலை நசுங்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொளத்தூர் அருகே மாநகர பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த வித்யா கொரட்டூர் சந்திப்பு 200 அடி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, மாநகர பேருந்து இவரது வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வித்யா பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஓட்டுனரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்பபோது போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day