முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது - ஆளுநர் ஆர்.என்.ரவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 


பாண்டிகோவில் பகுதியில் முருக பக்தர்கள் மாநாட்டுக்காக விழா ஏற்பாடுகள் நடைபெறும் பகுதியை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை பார்வையிட்ட ஆளுநர், திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், முருக பெருமான் நமது அடையாளம் எனவும், அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த மாநாடு  அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி எனவும் கூறினார். 

Night
Day