கழக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி, கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுல் கந்தசாமியின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி, கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் திரு.அமுல் கந்தசாமி, தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என கூறியுள்ளார். கழகம் ஒன்றிணையவேண்டும், தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையவேண்டும் என மிகவும் பிரயாசைப்பட்டவர் என்று தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, அவரது நல்ல எண்ணம் கண்டிப்பாக ஈடேறும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

அன்பு சகோதரர் திரு.அமுல் கந்தசாமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day