எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய மெட்ரோ வழித்தடத்திற்கான, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம் தோராயமாக 15 கிலோ மீட்டரை உள்ளடக்கியது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணி, Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கையும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வறிக்கையும் என இரு பணிகளும் வருகிற நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளன.