மயிலாடுதுறை: குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி அடுத்த வடகால் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி - திருமுல்லைவாசல் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

varient
Night
Day