தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பலாப்பழம் சாப்பிட குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி விரட்டினர். பந்தலூர் தாலுகா அருகே உள்ள சேரங்கோடு பகுதியில் இன்று காலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியே வந்தபோது காட்டு யானை ஒன்று வீட்டு வாசலில் நின்றுள்ளது. யானை, வீட்டின் அருகே உள்ள பலாப்பழ மரத்திலிருந்து பழங்களை பறித்து சாப்பிடுவதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யானை வனத்துறையினர், யானையை போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...