மயிலாடுதுறை : சித்தர்காடு பகுதியில் மேலும் ஒரு ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் வெளியானதையொட்டி கடித்து குதறப்பட்ட ஆட்டின் தலை மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட்பார்மில் சிறுத்தை ஒன்று ஆட்டினை அடித்து தின்றதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டின் எஞ்சிய பாகங்களை கைப்பற்றினர். தொடர்ந்து அப்பகுதியை ஆய்வு செய்ததில், சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லாததால், சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என  கூறியுள்ளனர். இந்நிலையில், ஆட்டின் பாகங்களை உடற்கூராய்வு செய்வதற்காக வனத்துறையினர் எடுத்து சென்றுள்ளனர். 

Night
Day