மதுரை: திருஷ்டி பொம்மை விற்பனை செய்யும் நபா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருஷ்டி பொம்மை விற்பனை செய்யும் நபா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் - செல்வி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமாக 12 புள்ளி 5 சென்ட் நிலம் உள்ளதாகவும், அதனை அவரது வீட்டின் அருகே உள்ள காவல்துறையை சேர்ந்த நபர் ஒருவா் ஆக்கிரமித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவா் மிரட்டுவதாக கள்ளிக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால், ஆட்சியா் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day