மதுரை: ஊதியம் வழங்காதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை வில்லாபுரம் பகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்காதை கண்டித்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா். மதுரை மாநகராட்சியில் உள்ள 84, 86, 90, 91 ஆகிய 4 வார்டுகளில் 60க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 4 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள், வில்லாபுரம் வெற்றி தியேட்டர் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினா், மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து சாலை ஓரத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

Night
Day