பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு - ஏகனாபுரம் மக்கள் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 636 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த பொதுமக்கள் மக்களவை தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். இதனை அறிந்த வட்டாட்சியர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வருகை தந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் 10 பேர் மீது 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Night
Day