எழுத்தின் அளவு: அ+ அ- அ
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோக நடைபெற்று வரும் நிலையில், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
வரும் 7-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட் உள்ள நிலையில், சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட ஆடுகளை வாங்கி சென்றனர். வெள்ளாடு, செம்மறியாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் 8 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய்வரை விற்பனையானது. இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 6 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆடுகளை கொண்டு வந்த கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போன்று ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஏராளமான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதிகாலை 4 மணி முதல் நடைபெற்ற சந்தையில் ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்து போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது வரை சுமார் 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.