நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பல்வறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லை, தேனி, தென்காசி மற்றும்  கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை கனமழை பெய்ய வாப்புள்ளதாகவும் கணித்துள்ள வானிலை மையம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகக்கூடும் என்றும் இன்று முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. . 

Night
Day