மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் கட்டிட கழிவுகளை கொட்ட முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் கட்டிட கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை மக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஒண்டிக்காரன் பாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் அமைந்துள்ளது. இந்த காலி இடத்தில் மர்மநபர்கள் சிலர் டிராக்டர் மூலம் கட்டிட கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்வதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், இன்று கழிவுகளை கொண்டு வந்த டிராக்டரை மடக்கி பிடித்து கருங்கல்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Night
Day