கழக வழக்கறிஞரின் தந்தை மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த கழக வழக்கறிஞர் இளந்தமிழ் ஆர்வலனின் தந்தை மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த கழக வழக்கறிஞர் திரு. இளந்தமிழ் ஆர்வலனின் தந்தையும், கழக முன்னாள் நகர்மன்ற தலைவருமான திரு. இரா. பாலசுப்ரமணியன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு. இளந்தமிழ் ஆர்வலனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day