தமிழகம்
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலிகுளத்தில் இறங்கி தேடியபோது உயிரிழந்த நி?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து மலைகிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தும்மக்குண்டு, மேகமலை ஊராட்சிகளில் அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட ஐந்து மலைக்கிராமங்களில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை கடந்த 2021 ஆம் ஆண்டு மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. இதனால் விவசாயத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குமுறுகின்றனா். மேலும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இதுவரை செய்து தரவில்லை எனவும் இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் மலை கிராம மக்கள் தெரிவித்தனா்.
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலிகுளத்தில் இறங்கி தேடியபோது உயிரிழந்த நி?...
காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகுழந்தைகள் நல அலுவலர் அளித்?...