தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக பெரியதாழை மீனவர்கள் வேலைநிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் மீன்பிடி பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக குமரி மற்றும் கேரளா மீனவர்கள் 80 பேரை தூத்துக்குடி மீனவர்கள் இன்று சிறைப்பிடித்தனர்.  இந்த நிலையில் தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக பெரியதாழை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 450-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனை குறித்து விளம்பர திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day