தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருவள்ளூர் அருகே தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையிலும், மகன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மீன் பிடி தொழிலாளி மோசஸூக்கு 15 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனர். மோசஸ் மீன் பிடிக்க சென்றபோது அங்கு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து வந்து இறுதிச் சடங்கு நடத்தினர். அவரது மகன் சந்தோஷ் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பொதுத்தேர்வு காரணமாக தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பொதுத்தேர்வு எழுதச் சென்றார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...