திருவள்ளூர்: சரிவர குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சரிவர குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரியை அடுத்த ஆவூர் ஊராட்சிக்கு ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாளி, குடங்களோடு அரசு பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day