தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
திருப்பத்தூர் நகர பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பத்தூர் 8வது வார்டு பகுதியான எல்லம்மன் கோயில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் குடிநீரில் கழிவுநீர் மற்றும் புழுக்கள் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த மக்கள், இந்த குடிநீரை குடித்த 4 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...