திண்டுக்கல்: பெற்றோர் தங்களை பள்ளிப்படிப்புடன் நிறுத்தி விடுவதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெற்றோர் தங்களை பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு திருமணம் செய்துவைத்து விடுவதாக அப்பகுதிகள் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாமரத்துப்பட்டி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால் பெரும்பாலான மாணவிகளை அவர்களின் பெற்றோர் 8-ஆம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிடுகின்றனர். உயர்நிலை பள்ளி படிப்புக்காக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியிருப்பதாலும், உரிய போக்குவரத்து வசதி இல்லாததாலும் பெற்றோர், மாணவிகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். இதனால் தாங்கள் கல்லூரி வாசலைக்கூட மிதிக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Night
Day