தமிழகம்
சென்னையில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் கொண்ட புறநகர் ஏ.சி. ரயில் சேவை தொடங்கியது..!...
பயணிகளின் கோரிக்கையை அடுத்து சென்னையில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் ...
தமிழக விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வஞ்சித்து வருவதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகள் மீது மத்திய அரசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருவதாகவும், போராட்டத்தில் கலந்து கொண்ட தன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் 2 ஆயிரத்து 500 ரூபாய் தரப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
பயணிகளின் கோரிக்கையை அடுத்து சென்னையில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் ...
பாகிஸ்தான் நடிகர் - நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்...