தமிழகத்தில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 27, 28 ஆகிய 2நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு 
இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 15 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 42.3 மில்லி மீட்டர் மழை பொழியும் நிலையில், 48.6 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை இயல்பை விட 37 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்றும் இதுவரை 70.7 மில்லி மீட்டர்​மழை பொழிந்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Night
Day