தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 24ம் தேதி வரை மிதமான மழை தொடரும் எனவும் அறிவித்துள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வாகம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

varient
Night
Day