தஞ்சை: வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்யும் குரங்குகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் மேலவழுத்தூர் பகுதியில் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலவழுத்தூர் ஹாஜியார் தெரு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்லும் குரங்குகள், தோட்டத்தில் உள்ள தென்னை, வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day