தஞ்சை அருகே தடுப்புச்சுவர் மீது வேன் மோதி விபத்தில் 4 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே தடுப்புச்சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற வேனில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். வேன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Night
Day